india

img

வெளிநாட்டினர் ஆதரவளித்தால் நல்லது தான்... ராகேஷ் திகாயத் கருத்து...

புதுதில்லி:
தில்லி - உபி எல்லையான காசிபூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வரும் பாரதிய கிசான்யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்திடம் போராட்டத்திற்கு வெளிநாட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு அவர்  “எங்கள் போராட்டத்துக்கு எந்த வெளிநாட்டு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.

எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு எதையும் வாரிக்கொடுக்கவில்லை, எங்களிடம் இருந்து எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.அமெரிக்க பாடகி ரிஷானா, நடிகை கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குராகேஷ் திகாயத், “ நீங்கள் குறிப்பிடும் இவர்கள் யாரென்றுஎங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆதரவு அளித்தால் நல்லது தான்” எனக்கூறினார்.

;