india

img

அதிக மையங்கள், இரட்டை முகக்கவசம் அணிந்து சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாம்.... உச்சநீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் வாதம்....

புதுதில்லி:
அதிக மையங்களை அமைத்து, இரட்டை முகக்கவசம் அணியவைத்து சிபிஎஸ்இ12 ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மதிப்பெண் கணிக்கீட்டுமுறையை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள்தரப்பில் வாதிடப்பட்டது.

கொரோனா தொற்றுபரவலால் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒன்றியஅரசு அறிவித்தது. அதேநேரத்தில்  மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்துஆய்வு செய்வதற்கு என சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் தரப்பில் அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழுவானது உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கையை தாக்க செய்தது. அதில்,’ பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில், அதாவது வெயிட்டேஜ் முறையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண்களாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.இந்த மதிப்பெண் கணிக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தமனுக்கள்  நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ,’ மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமாக இந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் இருக்கிறது. அதனால் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் முறையை மாணவர்கள் விரும்பவில்லை. அதில் அவர்களுக்கு திருப்தியும் கிடையாது. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகத்தான் கருதுகிறார்கள். தேர்வுஎழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை முகக்கவசம் அணிய வைத்தும், அதிகப்படியான மையங்களை அமைத்தும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் தேர்வுகளை கண்டிப்பாக நடத்தலாம்,’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், ’இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ ஆகிய நிர்வாகங்களை ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் என்று தனித்தனியாக தரம் பிரித்து பார்க்க முடியாது. இருப்பினும் இதில் உடனடியாக இறுதி முடிவு எடுக்க வேண்டியுள் ளது. மேலும் இதுகுறித்து ஒன்றிய அரசின்தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;