india

img

ஒரே தேதியில் கிராம வங்கி அதிகாரி - கிளார்க் நியமனத் தேர்வு.... தேர்வர்களின் பாதிப்பைப் போக்க தேர்வாணையத்திற்கு சு.வெங்கடேசன் எம். பி. கோரிக்கை....

புதுதில்லி:
கிராம வங்கிகளின் அதிகாரி நியமனங்களுக்கான நேர் காணலும், கிளார்க் நியமனங்களுக்கான இறுதித்தேர்வும் ஒரே நாளில் நடைபெற வுள்ளதை மாற்றி தேர்வர்களின் பாதிப்பைப் போக்குமாறு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கும், தமிழ்நாடு கிராம வங்கித்தலைவருக்கும் கடிதங்களை எழுதி யுள்ளார். 

சு. வெங்கடேசன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதத்தில், மண்டல கிராமவங்கிகளுக்கான அதிகாரிகள் நியமனங்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 19 இல் இருந்து 22 ஆம்தேதி வரை வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது என எனக்கு தெரிவிக்கப்பட்டது. மண்டல கிராம வங்கிகளின் எழுத்தர் இறுதித் தேர்வுகளும் பிப்ரவரி 20 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் இருப்பதால் நிறையதேர்வர்களைப் பாதிக்கக் கூடும். அவர்களில் சிலர் என்னைத் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு சென்றுதீர்வு கண்டு உதவுமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்கள்.

தேதி மாற்றம் தேவை
ஆகவே அதிகாரிகள் நியமனத்திற்கான நேர் காணல் தேதியைப் பிறிதொரு நாளுக்கு மாற்றி இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டிய பலரின்பாதிப்பைத் தவிர்க்குமாறு வேண்டு கிறேன்.பணி நியமனங்களுக்கான தயாரிப்புகளை மாதக் கணக்கில் செய்யும் இளைஞர்களின் சிரமத்தை கணக்கிற் கொண்டு தேதிகள் மோதாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும்,  கடிதங்களைத் தொடர்ந்து தேதி மாற்றத் திற்கான முயற்சிகளை செய்வேன் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

;