india

img

லட்சத்தீவில் சட்டவிரோதமாக சுற்றிய ஜெர்மானியர்... விசாரணை நடத்த எளமரம் கரீம் எம்பி கோரிக்கை....

புதுதில்லி:
விசா சட்டம் மற்றும் லட்சத்தீவில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி பாஜக மாநிலத் தலைமையின் உதவியுடன் தீவில் சுற்றித் திரிந்த ஜெர்மன் குடிமகன் ரூலன் மோஸ்லிக்கு எதிராக என்ஐஏ விசாரணை நடத்துமாறு எளமரம் கரீம் எம்.பி. மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது அனுமதி விண்ணப்பத்தில் மோசடி செய்து மோஸ்லி தீவுக்கு வந்துள்ளார். கவரட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தபோது கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட முன் ஜாமீன் நிபந்தனைகளும் பின்பற்றப்படவில்லை. பங்கரம் தீவில், அவரது ஸ்பான்சர் லட்சத்தீவு பாஜக தலைவரின் மகனாவார். அரசியல் தொடர்பு காரணமாக தீவு காவல்துறையினர் செயலற்று நின்றுள்ளனர். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் பங்கரம் தீவுக்கு சென்ற போது மோஸ்லியும் கலந்து கொண்டார். விசா, பாஸ்போர்ட் அல்லது அனுமதி இல்லாமல் அவர் எப்படி தீவில் தங்கியிருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஓராண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கவரட்டி காவல்துறையினர் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த நபரைப் பாதுகாக்கும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரியுள்ளார்.

;