india

img

முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவி கொலை....

புதுதில்லி:
தில்லியில் முன்னாள் ஒன்றிய  அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் (வயது 67) கொலை செய்யப்பட்டார்.  

காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம், திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்தவர். இவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வந்த  வசந்த் விஹார் இல்லத்தில் ஜூலை 6 அன்று இரவில் 3 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்துள்ளது. பின்னர் பணிப்பெண்ணை ஒரு அறையில் அடைத்துவிட்டு கிட்டி குமாரமங்கலத்தை தாக்கியுள்ளனர். முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு தப்பிஓடினர். பணிப்பெண் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். வீட்டில் துணிகளை துவைத்து வந்த தொழிலாளி ராஜு (24) என்பவர் தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றுள்ளார். ராஜுவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை தில்லி காவல்துறையினர்  தேடி வருகின்றனர்.

;