india

img

பிரதமருக்குக் கட்டப்படும் புதிய இல்லத்திற்கான நிதியில் 1 கோடி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கலாம்....

புதுதில்லி:
பிரதமருக்குக் கட்டப்படும் புதிய இல்லத்திற்கான செலவில் 6 கோடி பேருக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கலாம் 1 கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கலாம் என்றும்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்களும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.  இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமருக்கு ரூ. 13,450 கோடியில் புதிய இல்லம் கட்டப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் கடும் கண்டனங்களை  தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்  ராகுல்காந்தி எம்.பி.,  தனது டிவிட்டர் பக்கத்தில்,  “மத்திய விஸ்டா திட்டத்துக்காகச் செலவிடும் ரூ.13,450 கோடியில் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி வாங்கமுடியும், ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கலாம், 2 கோடி குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கலாம். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரிது” என்று  பதிவிட்டுள்ளார். பிரியங்கா காந்தி,”மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தடுப்பூசி, படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையாலும் தடுமாறுகிறார்கள். இந்த நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி மக்களைக் காப்பதுதான் மத்திய அரசின் வேலையாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. இதற்கான நிதி எங்கிருந்து பெறப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

;