india

img

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு   தடுப்பூசி செலுத்த வேண்டாம் மருத்துவக்குழு பரிந்துரை....

புதுதில்லி:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என்று மருத்துவ வல்லுநர் குழுபரிந்துரை செய்துள்ளது.இதுகுறித்து பிரதமரிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி போடுவதை தொடங்கலாம் என்றும் தற்போது நடைமுறையில் உள்ளதடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்றும்  தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இடங்களில்மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம் என்றும் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.மேலும் கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் திட்டமிடப்படாத தடுப்பூசி திட்டம்உருமாறிய கொரோனாவை தூண்ட வழிவகுக்கும் என்றும்  வல்லுநர் குழுஎச்சரித்துள்ளது. 

;