india

img

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவ புதிய ‘செயலி’ அறிமுகம்

புதுதில்லி;
பல்வேறு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு வாழ்இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை சார்பில்‘குளோபல் பிரவாசி ரிஷ்தா’என்ற பெயரில் புதிய ‘செயலி’அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இந்த ‘செயலி’யை மத்தியவெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன்  வெளியிட்டார். அப்போது அமைச்சர் கூறுகையில், இந்திய அரசுவெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை கவனத்தில்கொண்டு அவர்களுக்கு தேவையான சேவைகளை அளிக்க தகவல் தொடர்பு தளமாக இந்த ‘செயலி’ இருக்கும்.

இதன் மூலம் முக்கிய அறிவிப்புகள், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வெளிநாடு வாழ்இந்தியர்களுக்கு அவ்வப் போது அளிக்கப்படும்.குறிப்பாக நெருக்கடி காலங் களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு உதவும் வகையில் இந்த ‘செயலி’ செயல்படும். வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் http://pravasirishta.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு அவர் வசிக்கும் நாட்டை குறிப் பிட வேண்டும்.உலகம் முழுவதும் உள்ளவெளிநாடு வாழ் இந்தியர் களை இணைக்க இதுவரை எந்த தளமும் இல்லை. அதற்கான முயற்சியாக இந்த குளோபல் பிரவாசி ரிஷ்தா என்ற‘செயலி’ உருவாக்கப்பட்டுள் ளது. மத்திய வெளியுறவுத் துறை, இந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆகியோரைஇணைக்கும் 3 வழி தொடர்பாகஇந்த ‘செயலி’ இருக்கும் என்றுதெரிவித்தார்.

;