india

img

குடியுரிமைச் சட்ட விதிகளை தயாரிக்க ஜூலை 9 வரை காலக்கெடு நீட்டிப்பு.... மத்திய அரசு தகவல்

புதுதில்லி:
குடியுரிமைச் சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதற்காக துணை குழுவிற்கான காலக்கெடு ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியுரிமை (திருத்த) சட்டம், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல் கண்காணிப்பு குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்டகேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் கீழ்க்கண்ட தகவல்களை அளித்தனர்.2019 டிசம்பர் 12 அன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டம், 2020 ஜனவரி 10 அன்று அமலுக்கு வந்தது. குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-க்கான விதிகள்தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு 2021 ஏப்ரல் 9 வரை மக்களவை துணை சட்டக் குழுவிற்கும்,2021 ஜூலை 9 வரை மாநிலங்களவை துணை சட்டக்குழுவிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தீவிரவாதசெயல்கள் கணிசமாக குறைந்துள்ளன. குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு (சிசிடிஎன்எஸ்) மற்றும் ஐசிஜிஎஸ் ஆகியவை குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நிர்ணயித்த இலக்கு 14,306 ஆக இருந்த போதிலும், 15,773 காவல் நிலையங்களில் குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.  383 காவல் நிலையங்களில் இதை நிறுவுவதற்கான பணி தொடங்கியுள்ளது.மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படைகளில் 27,167 பெண்கள் பணிபுரிகிறார்கள். மத்திய ஆயுதம் தாங்கியகாவல் படைகளில் பெண்களுக்கு பணி வழங்கவும், பதவிஉயர்வு வழங்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. இவ்வாறு பதிலில் தெரிவித்துள்ளனர்.

;