புதுதில்லி:
தனியார் நிறுவனங்களை அவமதித்தால் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்று நாடாளுமன்றத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ‘திடீர்’ கோபமடைந்து பேசினார்.
பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு புல்லரித்துப்போய் வரவேற்று, புளகாங்கிதம் அடைந்துள்ளனர் இந்திய தொழிலதிபர்கள். மகேந்திரா குழும சேர்மன் ஆனந்த் மகேந்திரா கூறுகையில், தொற்று நோய் காலகட்டத்தில் பிரதமரின் வார்த்தைகள் ஊக்குவிப்பாய் அமைந்துள்ளன. நாம் இப்போது நிர்வாகம் மற்றும் செயலில் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்பட வேண்டியது அவசியம் என்று பாராட்டுரை பாடியுள்ளார்.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத் தலைவர் சாஜன் ஜிண்டால், இந்திய தொழிலதிபர்களுக்கு முதல் முறையாக ஒரு இந்தியப் பிரதமர் மரியாதை அளித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடி பேசியது நாட்டிற்கு செல்வத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கிடும் தொழிலதி பர்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய உத்வேகமாகும் என்று பேசியுள்ளார்.