india

img

தினமும் ரூ.100 கோடி தாண்டும் பாஸ்டேக் வசூல்..... தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல்....

புதுதில்லி:
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டண வசூல் தினமும் ரூ.100 கோடியை தாண்டியது என்று தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் வாக
னங்கள் ‘பாஸ்டேக்’ முறையில் கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்பட்டது. பிப்ரவரி 16 முதல் பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அடாவடி வசூல் செய்யப்பட்டது. 

இந்நிலையில தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில், பிப்ரவரி 16 ஆம் தேதியில் இருந்து பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 2 வாரங்களில் மட்டும் 20 லட்சம் பேர் புதிதாக பாஸ்டேக் எடுத்துள்ளனர்.  இதன்மூலம் இதுவரை 2.8 கோடி வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்டேக் முறை அமல்படுத்தப் பிறகு தற்போது தினமும் வசூலாகும் சுங்க கட்டணம் ரூ.100 கோடியைதாண்டியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி சுங்க கட்டணம் பாஸ்டேக் மூலம் ரூ.103.94 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது. பாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
 

;