india

img

தனிக்கல்வி வாரியத்தை உருவாக்கி ‘‘வேத மரபுகள்” மூலம் நவீன பாடங்களை கற்பிக்க ஏற்பாடு.... ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சொல்கிறார்...

புதுதில்லி:
தனிக்கல்வி வாரியத்தை உருவாக்கி வேத மரபுகள்  மூலம் நவீனபாடங்களை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அதில், ‘’மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் (MSRVVP), தனியார் கல்வி வாரியம் அமைக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் கல்வி வாரியத்தில், வாய்வழியாக கற்பிக்கப்படும் வேத மரபுகள்மூலம் நவீன பாடங்களும் கற்பிக்கப் படும் என்று  தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசின் கீழ், சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) ஆகியகல்வி வாரியங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக, மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கியப் பணிவேத பாடசாலைகளை உருவாக்கு வதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும் ஆகும். இதன்மூலம் பழங்கால வேதங்களைப் பாதுகாத்து, அவற்றை வளர்க்கும் பணியில், மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.தற்போது இந்த அமைப்பு மூலம் தனியார் கல்வி வாரியத்தை உருவாக்கி, அதில் வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களையும் கற்பிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

;