india

img

கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 16 நாடுகளில் பயணம் செய்யலாம்... சீரம் நிறுவனம் தகவல்...

புதுதில்லி:
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி அளித்துள் ளன என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆதார் பூனா வாலா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறை  செயல்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசி களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு. இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை.இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தனது டிவிட்டர் பக்கத்தில், தற்போது பிரான்ஸ் அர
சும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம்கோவிஷீல்டு இப்போது 16 ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையில் ஒருநல்ல செய்திஎன்று  தெரிவித்துள்ளார்.

;