india

img

சீத்தாராம் யெச்சூரி கடும் விமர்சனம்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி... 

1ஆம் பக்கத் தொடர்ச்சி... 

முறை தடுப்பூசி என்பதாக இல்லாமல், குறிப்பிட்டசில மாதங்களுக்கு முதல்முறை தடுப்பூசி, அதைத்தொடர்ந்து இரண்டாம் முறை தடுப்பூசி என வழங்குவது படிப்படியாக கோவிட் 19 வைரஸ் பரவலையும், அது உருமாறும் வேகத்தையும், அதன் வீரியத்தையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஆஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை முதலில் செலுத்திய பிறகு ஆறு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கணிசமான மக்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிசெலுத்திவிட்டார்கள். அவர்கள் குறிப்பிட்ட சிலவாரங்கள் கழித்து - கோவிட் 19 வைரஸ் உருமாறும்வீரியத்தின் அடிப்படையில் - 16 வாரங்கள், 12 வாரங்கள் என - இரண்டாவது சுற்று தடுப்பூசி செலுத்த இருக்கிறார்கள்.ஆனால் இதற்கான எந்தத் திட்டமிடலும் மோடி அரசிடம் இல்லை. ஊரடங்கு போட்டு முடக்கிவிடுவோம் என்றஅச்சுறுத்தலைத் தவிர மோடி அரசிடம் கோவிட் - 19 பரவலைத் தடுக்க எந்த உருப்படியான திட்டமும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள்சுயேட்சையாக தற்காப்பு ஏற்பாடுகளுடன் இருப்பதுஎன்பது எப்போதுமே மிகக்குறைந்த விகிதத்திலேயே இருந்து வருகிறது. முகக்கவசம் அணிவதை  வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தினால் தவிரஅது குறித்த உணர்வற்றவர்களாக மக்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களது அன்றாடவாழ்க்கைத் தேவைகள் அவர்களை உந்தித் தள்ளுகின்றன. எனவே மக்களைக் குறைசொல்வதைவிடுத்து கோவிட் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளையும் தடுப்பூசி பெருவாரியான மக்களுக்கு செலுத்தப்படுவதையும் மோடி அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற பிரச்சனை தீவிரமாக எழுந்துள்ளது.
சீரம் நிறுவனத்தின் வேண்டுகோள் 
ஏப்ரல் 5 நிலவரத்தின்படி இந்தியா ஒரு லட்சம்மக்கள் தொகைக்கு வெறும் 6,310 பேருக்குத்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறது. ஆனால் உலக சராசரி என்பது  1லட்சம் பேருக்கு 8,900  தடுப்பூசிகள் ஆகும். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பதில் இஸ்ரேல், சிலி, பிரிட்டன், அமெரிக்கா,பிரேசில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இந்தியா மிக பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.இந்த நிலையில்தான் மத்திய மோடி அரசு தங்களுக்கு உதவினால் கூடுதலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று சீரம் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஆடெர் பூனாவாலா, தற்சமயம் தங்களது நிறுவனம் மாதத்திற்கு 60 முதல் 65 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும்
திறன்பெற்றிருக்கிறது என்றும் இதை உயர்த்துவதற்கு உடனடியாக ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்றும் அது கிடைத்தால் இன்னும் மூன்றுமாதங்களில் கணிசமான தடுப்பூசிகளை உற்பத்திசெய்ய முடியும் என்று கூறியிருக்கிறார். மத்திய அரசின் வேண்டுகோளின்படி மானிய விலையில் தடுப்பூசிகளை வழங்கி வருவதாகவும், தடுப்பூசி உற்பத்தி  மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் சம்ம்பாதிக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். (விரிவான செய்தி: பக்கம் 6)

சீத்தாராம் யெச்சூரி கேள்வி 
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடுமையானகேள்விகளை எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, “மத்திய அரசாங்கம் கூறிக்கொள்வது போல, தடுப்பூசி பற்றாக்குறை இல்லையெனில் ஏன் நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் அமலாக்கப்படவில்லை? மோடி அரசாங்கம் செயல்பட வேண்டுமானால் இந்த நாட்டில் இன்னும் எத்தனை மரணங்கள் நிகழ வேண்டும்?” என்று சாடியுள்ளார்.

“கோவிட் பெருந்தொற்று இன்னும் தீவிரமாக தலைவிரித்தாடுகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையில் இந்தியா பிரேசிலையும் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது.இந்த நேரத்திலும் கூட பிரதமர் தடுப்பூசி தயாரிப்பைஅதிகரிக்க மறுக்கிறார். தடுப்பூசி தயாரிப்பில் பலஅழுத்தங்களை, பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம்நிறுவனம் தெரிவிக்கிறது. பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக என்று கூறி உருவாக்கப்பட்ட, ஆனால் இதுவரையிலும் தணிக்கைக்கு உட்படுத்தப்படாத கோடிக்கணக்கான ரூபாய் பணம் உள்ளதனது பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து உதவுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மறுக்கிறார். அதற்கு மாறாக மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று உபதேசம் செய்வதில்தான் பிரதமர் கவனம் செலுத்துகிறார். இது மிகவும் மோசடியானது. பாஜக அரசு தனது கடமையை தட்டிக்கழித்துச் செல்ல முடியாது. வயது வந்த அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கு உடனடியாக மோடி அரசு செயல்பட்டாக வேண்டும்” என்றும் சீத்தாராம்யெச்சூரி வற்புறுத்தியுள்ளார்.

;