india

img

2.3 கோடி பேருக்கு கொரோனா  தடுப்பூசி   மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்....

புதுதில்லி:

இந்தியாவில் இதுவரை 2.3 கோடி பேருக்கு கொரோனாதடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும்கொரோனா பெருந்தொற்றுக்கு  கடந்த ஜனவரி 16 ஆம் தேதிமுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது .பின்னர் 65-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் திங்களன்று மட்டும் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

;