india

img

கொரோனா தடுப்பூசி முகாம்.... அரசு, தனியார் பணியிடங்களில் நடத்த அனுமதி....

புதுதில்லி:
அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் அரசு மற்றும் தனியார்அலுவலகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தலாம் என்றும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடத்தலாம்; வயது வரம்பில்எந்த மாற்றமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;