புதுதில்லி:
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரத்பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்புமருந்தான கோவாக்சினை- பிரதமர் நரேந்திரமோடி திங்களன்று செலுத்திக்கொண்டார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா, மற்றொரு செவிலியர்ரோசம்மா ஆகியோர் தடுப்பூசியை மோடிக்கு செலுத்தினர். தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி 30 நிமிட மருத்துவர்கள் கண்காணிப்பிற்குப்பின் புறப்பட்டுச் சென்றார். ஊசி போட்டுக் கொண்ட பிரதமர் ஜாலியாகக் கூறியதாக செவிலியர் நிவேதா அளித்த தகவல்: “பிரதமர், வெர்ட்டினரி ஊசியையா (பெரிய்ய...) எடுத்து வருகிறீர்கள் என்றார். இல்லை என நாங்கள் சிரித்தோம்.அதற்கு அவர் அரசியல்வாதிகளின் தோல்கள் அழுத்தமாகத்தான் இருக்கும். பெரிய ஊசியை கொண்டு வாருங்கள் என்றார்.