india

img

6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு.... மத்திய அரசு தகவல்...

புதுதில்லி:
 தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 96 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 051 பேராக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், தற்போது பாதிப்பு 16 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும், பயனுள்ள கண்காணிப்பு உத்திகளைப் பின்பற்றுமாறும்  மாநில அரசுகளை மத்திய அரசுகேட்டுக்கொண்டுள்ளது.
 

;