india

img

மக்களின் கவனக்குறைவால் கொரோனா அதிகரிப்பு...

புதுதில்லி:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 6 மாநிலங்களில் இல்லாத அளவாக தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் கொரோனா பரவல்மீது அலட்சியம் காட்டுவது பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது. தமிழகம், குஜராத்,கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

;