india

ஆஷிஷ் யெச்சூரி காலமானார்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....

1ஆம் பக்கத் தொடர்ச்சி.... 

10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்புஅதிகமானதால் அவருக்கு எக்மோ சிகிச்சையும்வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஏப்ரல் 22 வியாழனன்று அதிகாலை தில்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையை தருகிறது. இவரது மறைவுதோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சிறந்த பத்திரிகையாளர் என்ற வகையில் அவரது மறைவு பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும்.ஆசிஷ் யெச்சூரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது மறைவால்துயருற்றிருக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுவின் சார்பில் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஆஷிஷ் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள்,  மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆஷிஷ் யெச்சூரி மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இந்த கடினமான தருணத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். இந்தக் கடினமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று
கூறியுள்ளார்.

கி.வீரமணி, தலைவர்கள் இரங்கல்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்சீத்தாராம் யெச்சூரியின்  மகன்  அஷிஷ் யெச்சூரி மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கொடுந்தொற்று காலத்தில் கொள்கைப் போராட்டம் நடத்துவதில் சளைக்காது சமர்புரியும் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு, வாழ்க்கையில் இப்படி ஓர் ஏற்படக்கூடாத இழப்பு ஏற்பட்டுள்ளது நமக்கு பெரு வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அக்கட்சியினருக்கும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

;