india

img

மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிடுக.... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதுதில்லி:
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ஜனவரி 18 அன்று  சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர்  கப்பலை மோதி மூழ்கடித்து, கொலை செய்தனர்.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 3 அன்று மாநிலங்களவையில்   அதிமுக எம்.பி., தம்பிதுரை, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு  கண்டனம் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து திமுக., மற்றும் அதிமுக எம்.பி.,க்களும் இலங்கை அரசின் நடவடிக்கையை  கண்டித்தனர். 

திமுக எம்.பி. திருச்சி சிவா, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தனர்.இதற்கு  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்கையில், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது. இலங்கை அரசிடம் இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்றார்.

;