india

img

தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்புப்பணிக்கு பயன்படுத்துங்கள்..... சோனியா காந்தி அறிவுறுத்தல்.....

புதுதில்லி:
தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை  தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக் காக செலவழிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோனியா காந்தி. இந்த தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இன்னும் ரூ.1.17 கோடி நிலுவையில் இருக்கிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவிவருவதால் மக்கள் பாதிக்கப்பட்டும், சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தும் வருகின்றனர். எனவே மேற்படி நிதியை ரேபரேலி தொகுதி மக்களின் மேம்பாடுமற்றும் பாதுகாப்புக்காக பயன்படுத்தலாம். அத்துடன் கொரோனா தடுப்புஉபகரணங்கள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தலாம். இந்த தொகைக்கு ரேபரேலி ஆட்சியரை பொறுப்பதிகாரியாக நியமித்துள்ளேன். இது தொடர்பாக மறுஒப்புதல் எதுவும் பெறத் தேவையில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

;