india

img

கார்ப்பரேட் நன்கொடையில் 80 சதவிகிதத்தை வாரிக் குவித்த பாஜக.... 2019-20இல் மட்டும் ரூ. 271 கோடியே 50 லட்சம் நிதி....

புதுதில்லி:
கடந்த 2019-20 நிதியாண்டில், அரசியல் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த கார்ப்பரேட் நன்கொடையில் பாஜக மட்டும் சுமார் 80 சதவிகிதத்தை வாரிக் குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது, எலக்டோரல் டிரஸ்ட் (Electoral Trust) எனப்படும் கார்ப்பரேட் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம்2019-20 நிதியாண்டில் ரூ. 271 கோடியே 50 லட்சத்தைப் பாஜக பெற்றுள்ளது.இதில், ‘ப்ருடெண்ட் அறக்கட்டளை’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 217 கோடியே 75 லட்சத்தையும், ஜன்கல்யாண் தேர்தல் அறக்கட்டளையிடம் இருந்து ரூ. 45 கோடியே 95 லட்சத்தையும் பாஜக பெற்றுள்ளது. இதுதவிர ஏபி பொதுத் தேர்தல் அறக்கட்டளை ரூ. 9 கோடி, சமாஜ் தேர்தல் அறக்கட்டளை ரூ. 3 கோடியே 75 லட்சம் என பாஜகவுக்கு நன்கொடைகளைத் தூக்கிக் கொடுத்துள்ளன.

இதே காலத்தில், காங்கிரஸ் ரூ. 58 கோடி அளவிற்கே கார்ப்பரேட் நன்கொடையைப் பெற்றுள்ளது. ப்ருடெண்ட் அறக்கட்டளையில் இருந்து ரூ. 31 கோடி, ஜன்கல்யாண் அறக்கட்டளையில் இருந்து ரூ. 25 கோடி, சமாஜ்அறக்கட்டளையில் இருந்து ரூ. 2 கோடி என இந்த நிதியை காங்கிரஸ் திரட்டியுள்ளது.மாநில கட்சிகள் அளவில் தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதி ரூ. 130 கோடி,சிவசேனா ரூ. 111 கோடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ. 92 கோடி, அதிமுக ரூ. 89 கோடி, திமுக ரூ. 64 கோடி, ஆம் ஆத்மி ரூ. 49 கோடி என கார்ப்பரேட் நன்கொடைகளை பெற்றுள்ளன.இந்தியாவிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘ப்ருடெண்ட்’ போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமே அரசியல் கட்சிகளுக்கு நன் கொடைகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

;