india

img

51 கோயில்களை அர்ச்சர்களிடம் தூக்கிக் கொடுத்த பாஜக அரசு.... உத்தரகண்ட் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்....

டேராடூன்:
உத்தரகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார் நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட 51 கோயில்களின் நிர்வாகங்களை அரசாங்கமே நிர்வகிக்கும் என்று அம்மாநில பாஜகஅரசு கடந்த ஆண்டு முடிவெடுத்தது. அப்போதைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இதற்கானஉத்தரவைப் பிறப்பித்தார். இதுதொடர்பான மசோதாவையும் அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஆளுநர் பேபி ராணிமவுரியாவின் ஒப்புதலும் பெறப் பட்டது.அரசு அறநிலையக் கட்டுப் பாட்டிலுள்ள கோயில்களை எல்லாம், அந்த மதங்களைச் சேர்ந்த அமைப்புகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதுதான் பாஜக-வின் நெடுநாளைய கோரிக்கையாகும். அப்படியிருக்க, உத்தரகண்டில் 51 கோயில்களை, அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது முக்கியமானதாக பார்க் கப்பட்டது. 

ஆனால், இதற்கு எதிராக போராட்டங்களும் அங்கே துவங்கின. அர்ச்சகர்கள் அந்தந்தகோயில்களில் போராட்டங்களை நடத்தினர். ஒரு சிலர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்துப் பயமுறுத்தினர். பின்னர் கொரோனா பொதுமுடக்கம் வந்ததால், இந்தப் பிரச்சனை அமுக்கிப் போனது.சமீபத்தில், உத்தரகண்ட் பாஜக ஆட்சியில் நடக்கும் ஊழல்குற்றச்சாட்டுக்களை திசைத் திருப்புவதற்காக, அக்கட்சியின் தேசிய தலைமை, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை பதவியிலிருந்து நீக்கியது. தீரத் சிங் ராவத்தை புதிய முதல்வராக்கியது. இந் நிலையில் அவரை உடனடியாக சென்று சந்தித்த புரோகிதர்கள், அர்ச்சகர்கள் மற்றும் சாமியார்கள் முன்புபோல கோயில்களை தங்களிடமே விட்டுவிடவேண்டும் என்று வலியுறுத்தினர்.அதற்கு பலனும் கிடைத்துள்ளது,

உத்தரகண்ட் மாநிலத்தில், கோடிக்கணக்கில் காணிக்கை கொட்டும் 51 கோயில்களையும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து மீண்டும் அர்ச்சகர்களிடமே ஒப்படைப்பதென பாஜக அரசு மசோதா தற்போதுநிறைவேற்றியுள்ளது. இதற்கும்ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

;