நீட் தேர்வு தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறைகேடு சம்பவங்கள் வெளியாகி வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் தலைமையில் நாடு முழுவ தும் போராட்டம் வலுத்து வருகிறது. தில்லி, கேரளா, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்க ளில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் கொதித் தெழுந்து வருகின்றனர். இந் நிலையில், இந்த மாணவர்க ளின் போராட்டத்தை திசை திருப்பும் வேலையை துவங்கியுள்ளது பாஜக.
பாஜகவின் மாணவர் பிரி வான ஏபிவிபி (அகில பாரத வித்தியார்த்தி பரிசத்) அமைப்பு மூலம் நாடக போராட்டத்தை நடத்தி, மற்ற மாணவ அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதாவது, ”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை களுடன் போராடி வரும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மற்ற மாணவர்க ளின் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில், நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மையை உணர்ந்து, பாது காப்பாக நீட் தேர்வு நடத்த வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் போ தும் என்றும் கூறி ஏபிவிபி நாடக போராட்டம் நடத்தி வருகிறது. அதாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண் டாம். சிபிஐ விசாரணை நடத்தி னால் போதும் என்று கூறி நீட் தேர்விற்கு மறைமுகமான ஆதரவுடன் ஏபிவிபி திசை திருப்புவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏபிவிபி அமைப்பினரை மட்டும் ஏன்
ஒன்றிய கல்வி அமைச்சர் சந்தித்தார்?
நீட் தேர்விற்கு எதிராக ஒன்றிய கல்வி அமைச்ச கத்துக்கு முன் கடந்த ஒருவார காலமாக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாத ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தில்லியில் ஒன்றிரண்டு நாள் போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளது ஏபிவிபி-யின் தேசிய பொதுச்செயலாளர் யாக்வல்கியா சுக்லா மூலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏபிவிபி-யின் தேசிய பொதுச்செயலாளர் யாக்வல்கியா சுக்லா கூறுகையில்,”தேர்வுகளில் வெளிப் படைத் தன்மையை உறுதி செய்து மாணவர்களின் நம்பிக் கையை தக்கவைக்க அரசு செயல்பட வேண்டும். அத னால் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்” என கூறி யுள்ளார்.