india

img

பாரதிய ஜனதா பார்ட்டியா... பாரதிய ‘ஜக்தா’ பார்ட்டியா? மோடி அரசை சாடிய மணீஷ் சிசோடியா....

புதுதில்லி:
மாநிலங்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர, ஒன்றிய அரசு வேறெந்த வேலையும் பார்ப்பது கிடையாது என, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.தில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ரேசன் பொருட்களை வீடுகளுக்கே நேரில் சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்தது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்துவிட்டதால், அத்திட்டத்தை தில்லி அரசால் செயல்படுத்த முடியவில்லை. 

இவ்விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும், பீட்சா, பர்கரை டோர்டெலிவரி செய்யும்போது, ரேசன் பொருட்களை டெலிவரி செய்ய முடியாதா என்று கேள்வி எழுப்பியும் இப்துவரை ஒன்றிய அரசு அதற்கு பதிலளிப்பதாக இல்லை. ‘தில்லி அரசின் அறிவிப்பு முற்றிலும் மோசடியானது’ என்பதோடு மாறாக, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிறுத்திக் கொண்டார்.இந்நிலையிலேயே, ஆம் ஆத்மிமூத்தத் தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பாரதிய ‘ஜனதா’ கட்சியைத்தான் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தனரே தவிர, பாரதிய ‘சண்டை’ கட்சியை அல்ல!”என்று கூறியுள்ளார்.

மேலும், “மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு இணைந்து பணியாற்ற வேண்டுமே தவிர, அவற்றின் பணியில் தலையிடக் கூடாது. ஆனால், மாநில அரசுகளுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர, ஒன்றிய அரசு வேறெந்த வேலையும் பார்ப்பது இல்லை!” என்றும் அவர் விமர்சித்துள் ளார்.

;