india

img

ஏழை மக்களிடம் ரூ. 300 கோடியை சுருட்டிய வங்கிகள்... 15 கோடி ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்குகளுக்கும் கட்டண வசூல்....

புதுதில்லி:
வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (டெபாசிட்) இல்லை என்ற காரணத்திற்காக, வங்கிகள் அபராதம் வசூலிப்பது வழக்கமானதுதான்.ஆனால், குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவைப்படாத ஜீரோ பேலன்ஸ் (zero balance) கணக்குகள்எனப்படும் அடிப்படை வங்கிக் கணக்கு களிலிருந்தும், எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் ரூ. 300 கோடி அளவிற்கு கட்டணம் வசூலித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மும்பை ஐஐடி, ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதில், அடிப்படை சேமிப்பு கணக்குகளில் (Basic Savings BankDeposit Accounts) இருந்து, வாடிக்கையாளர்கள் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போதும், பொதுத்துறை வங்கியான, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ (SBI), 17.70 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு, 2015 முதல் 2020 வரையிலான ஐந்தாண்டுகளில் 12 கோடி கணக்குகளில் இருந்து, சுமார் 300 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’, 44 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய வங்கிஎன்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு அடுத்ததாக, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரசுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உள்ளது. இந்த வங்கியும், அதே2015-20 காலகட்டத்தில் 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாயை, அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குகளிலிருந்து கட்டணமாக வசூலித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் 2013-ஆம்ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கிக் கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப்படவேண்டும். இதன்படி பார்த்தால், அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்குமேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். அடிப்படை வங்கி கணக்கில்இடம்பெற்றிருக்கும் வசதிகள் மற்றும்சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும்போது, 4 முறை சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக் கப்படும் என்பதோடு, மதிப்புக்கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றே குறிப்பிடுகிறது. வங்கிக் கணக்கில் 4 பணப் பரிமாற்றத்துக்கு பிறகான பரிமாற் றத்தை, வங்கியின் மதிப்புக்கூட்டு சேவையாகவே ரிசர்வ் வங்கியும் கருத்தில் கொள்கிறது.ஆனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனது வாக்குறுதிகளை மீறி, 4 முறைக்குப் பிறகானபணப் பரிமாற்றத்துக்கு மிக அதிககட்டணத்தை எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளது. அதாவது என்இஎப்டி, ஐஎம்பிஎஸ், யுபிஐ, பிஎச்ஐஎம்-யுபிஐ,பண அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் பெயரில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.17.70 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், தனியார்வங்கிகளும் இதேபோல வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக ஐஐடி ஆய்வு கூறுகிறது. குறிப்பாக,ஐடிபிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களிடம் 4 முறைக்குப் பிறகானஒவ்வொரு பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றத்துக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரூ. 20 என்ற அளவில் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளதையும் ஏடிஎம் சேவைக்கட்டணமாக ரூ. 40 வசூலிக்க ஆரம்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள் ளது.

;