india

img

அவநம்பிக்கையை ஏற்படுத்த தேசவிரோதிகள் சதியாம்... ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் கூப்பாடு.....

புதுதில்லி:
கொரோனா சூழலைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த தேச விரோதிகள் முயற்சி செய்வதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸபல் கூப்பாடு போட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் கொரோனா தொற்றின் 2-ஆவதுஅலையால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலைப் பயன்படுத்தி தேச விரோத சக்திகள் மக்களிடையே எதிர்மறையான எண் ணங்களை விதைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.கொரோனா தொற்றால் தற்போது நிலவும் சூழலுக்கு தங்கள் நோ்மறையான நடவடிக்கைகள் மூலம் தீா்வு காண முயற்சிக்கும் மக்கள், தேச விரோத சக்திகளின் சதிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண் டும். சமூகத்தில் நோ்மறை மற்றும் நம்பிக் கையான சூழலை பராமரிக்க ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும். தற்போதுள்ள சவால் களுக்கு தீர்வு காண சமூக, மத அமைப்புகள் முன்வர வேண்டும்.மோசமான நெருக்கடிகளை எதிர்கொள் வதில் இந்தியாவுக்கு உள்ள திறன் குறித்து உலகம் நன்கு அறியும். பொறுமை, சுய ஒழுக்கம், பரஸ்பர ஆதரவு, மன வலிமை மூலம் தற்போதைய சூழலை கடந்து வருவோம் என நம்பிக்கை உள்ளது.இவ்வாறு தத்தாத்ரேயா ஹோஸபல் கூறியுள்ளார்.

;