india

img

மேலும் நான்கு கொரோனா தடுப்பூசிகள்.... மத்திய அரசு தகவல்....

புதுதில்லி:
இந்தியாவில் மேலும் நான்கு கொரோனா தடுப்பூசிகள் தயாராகி வருவதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவிலேயே தயாரான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கோவிட்-19 தடுப்பூசிகள் இன்னும் சிலதினங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தஇரு தடுப்பூசிகள் தவிர,மேலும் நான்கு கோவிட் -19தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவற்றின் உற்பத்தியாளர்கள் விரைவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தை அணுகலாம்
என்று மத்திய சுகாதாரஅமைச்சகம் தெரிவித்துள்ள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் தற்போது வெளிவந்துள்ள தடுப்பூசிகள் தவிர மேலும் நான்கு தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. ஜைடஸ் காடிலா,ஸ்புட்னிக்-வி, பயோலாஜிக்கல்-இ மற்றும் ஜெனோவா ஆகியவை தற்போது இந்தியாவில் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை கட்டத்தில் இருக்கும் பிறதடுப்பூசிகள் ஆகும். வரவிருக்கும் நாட்களில், இந்தத்தடுப்பூசிகளில் சில, அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தை அணுக வாய்ப்புள்ளது.

இதில் சைடஸ் காடிலா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளை டிசம்பரில் நிறைவுசெய்தது. மூன்றாம்  கட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல்,ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளன, மேலும் மூன்றாம் கட்ட சோதனைகள் அதன் இந்திய பங்குதாரர் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.முதல் கட்டமாக பயோலாஜிக்கல்- இ தடுப்பூசியின்மருத்துவப் பரிசோதனைகள்டிசம்பரில் தொடங்கப்பட்டது.இரண்டாம் கட்டம்மார்ச் மாதத்தில் தொடங்கும்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனோவாவின் எம்-ஆர்என்ஏ அடிப்படையிலான கோவிட் 19 தடுப்பூசிதற்போது முதல் கட்டத்தில்ள்ளது. இரண்டாம் கட்டமருத்துவப் பரிசோதனைகள்மார்ச் மாதத்தில் தொடங்கும்.இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

;