india

img

தமிழகத்துக்கு 2 லட்சம்  ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு...  

புதுதில்லி:
தமிழகத்துக்கு 2 லட்சத்து  05 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகளும், புதுவைக்கு 11 ஆயிரம் குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

 2021 மே 16ஆம் தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெம்டெசிவிர் குப்பிகளின் விவரத்தை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்தார். இதுநாடு முழுவதும் ரெம்டெசிவிர் சுமூகமாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் என்றும் எந்த நோயாளியும் சிரமத்தை சந்திக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 9ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டரெம்டெசிவிர் பற்றி கடந்த 1 ஆம் தேதி தெரிவிக்கப் பட்டது. கடந்த ஏப்ரல் 21ஆம்  முதல் மே 16ஆம் தேதி வரையிலான புதிய ஒதுக்கீடு பட்டியலை மருந்துகள்துறையும், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலஅமைச்சகமும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ள தாக அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மருந்துகள் துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகத்துக்கு 2 லட்சத்து 05 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகளும், புதுவைக்கு 11 ஆயிரம் குப்பிகளும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன. இதே போல் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை நியாயமாகப் பயன்படுத்த, இவற்றின் விநியோகத்தை முறையாகக் கண்காணிக்கும்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

;