india

img

ஏப்.30 வரை இங்கிலாந்துக்கு விமான சேவை நிறுத்தம்

புதுதில்லி:
ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை இங்கிலாந்துக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.இதனால் ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை இங்கிலாந்துக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும்  விமான சேவைதொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குதல் மற்றும் தள்ளுபடி தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.முன்னதாக கொரோனா அதிகரிப்பு காரணமாக இங்கிலாந்து நாட்டவர் யாரும் தற்போதைய சூழலில் இந்தியா செல்ல வேண்டாம் என்று அறிவித்து,  ரெட் லிஸ்ட் பட்டியலில் இந்தியாவை இங்கிலாந்து சேர்ந்திருந்தது. 

;