india

img

கார்களில் ஏர்-பேக் கட்டாயம்...

புதுதில்லி:
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிதாகவடிவமைக்கும் கார்களில் உயிரை பாதுகாக்கும் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில்  ஆகஸ்ட் 31 ஆம்தேதிக்குள், ஏர்-பேக்கை பொருத்த வேண்டும் என்றும் மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் கார்கள் விலை சற்று உயரலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக  2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல்ஓட்டுநர் இருக்கைகளில் ஏர்-பேக் கட்டாயம் என அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது, முன் பக்கம் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர்-பேக் கட்டாயம் என அறிவித்துள்ளது.

;