india

img

8 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து வெளியேறினர்....

புதுதில்லி:
தில்லியில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கை சமாளிக்க முடியாமல், இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானபுலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து வெளியேறியதாக போக்குவரத்துத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஊரடங்கை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவி்த்தார். அதன்பின் ஊரடங்கு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு, தொடர்ந்து 4-வது வாரமாக நீடித்து வருகிறது. இது அடுத்த வாரமும் தொடரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த 4 வார ஊரடங்கு காலத்தில் தில்லியில்பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி சொந்த மாநிலம் திரும்பினர். 

ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதிவரை இதுவரை தில்லியிலிருந்து பேருந்துகள் மூலம் 8 லட்சத்துக்கு 7 ஆயிரத்து 32 புலம்பெயர்தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றனர்.இதில் ஊரடங்கின் முதல் வாரத்தில் மட்டும் 3லட்சத்து 79 ஆயிரத்து 604 தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றனர். 2-வது வாரத்தில் 2,12,448 தொழிலாளர்களும், 3-வது வாரத்தில் 1,22,490 பேரும், 4-வது வாரத்தில் 92,490 பேரும் தில்லியிலிருந்து வெளியேறினர். இந்த 4 வாரங்களில் மட்டும் மாநிலங் களுக்கு இடையே 21,879 முறை பேருந்து போக்குவரத்து நடந்துள்ளது.இதுகுறித்து தில்லி போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில், “அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட் உள்ளிட்டவை தகுந்த நேரத்தில் ஒத்துழைப்பு அளித்ததால், ஊரடங்கு காலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்க பாதுகாப்பாக சொந்த ஊரில் சேர்க்க முடிந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊரில் சேர்க்க 500 பேருந்து குழுக்களை தில்லி போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்திருந்தது. எந்த தொழிலாளியிடம் இருந்தும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;