india

img

கொரோனாவிற்கு 719 மருத்துவர்கள் பலி....

புதுதில்லி:
 கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு இந்தியா முழுவதும் 719மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள்உள்ளிட்டசுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகியிருந்து கடுமையாகப் போராடி வருகின்றனர்.தொற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களில் தொற்று பாதித்த 719மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில், பீஹாரில் அதிகபட்சமாக 111 மருத்துவர்களும், தில்லியில் 109, உ.பி.,யில் 79, மேற்கு வங்கத்தில் 63, இராஜஸ்தானில் 43, ஜார்க்
கண்ட் மற்றும் காஷ்மீரில் 39, ஆந்திராவில் 35, தெலுங்கானாவில் 36, குஜராத்தில் 37,ஒடிசாவில் 28, மகாராஷ்டிராவில் 23, தமிழகத்தில் 32,மத்திய பிரதேசத்தில் 16,அசாம் 8, கர்நாடகாவில் 9,கேரளாவில் 24, மணிப்பூர்,சத்தீஸ்கரில் தலா 5, ஹரியானா, பஞ்சாபில் தலா 3 பேர்,கோவா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேர், பாண்டிச்சேரி ஒருவர் என 719மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மருத்துவசங்கம் தெரிவித்துள்ளது.

;