india

img

கொரோனா 2வது அலையில் 513 மருத்துவர்கள் உயிரிழப்பு - இந்திய மருத்துவ சங்கம்

கொரோனா 2வது அலையில் இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கோரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியை தகவலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் கூறியிருப்பதாவது:

அதிகபட்சமாக தலைநகர் தில்லியில் மட்டும் 103 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரம் - 29, 

அசாம் - 6, 

பிகார் - 96,

சத்திஸ்கர் - 3,

குஜராத் - 31,

கோவா - 2,

ஹரியானா - 2,

ஜம்மு மற்றும் காஷ்மீர்- 3,

ஜார்கண்ட் - 29,

கர்நாடகம் - 8,

கேரளம் - 4,

மத்தியப்பிரதேசம் - 13,

மகாராஷ்டிரம் -15,

ஒடிசா - 16,

புதுச்சேரி, பஞ்சாப்பில் தலா - 1,

ராஜஸ்தான் - 39,

தமிழகம் - 18,

தெலங்கானா - 29,

திரிபூரா - 2,

உத்தரப்பிரேசம் - 41,

உத்தரகாண்ட் - 2,

மேற்குவங்கம் - 19

;