india

img

தமிழகத்திற்கு கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்...

புதுதில்லி:
தமிழகத்தில்  மேலும் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றியகல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஜூலை 15 அன்று தன்னை சந்தித்ததமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கூடுதல் தேர்வு மையங்கள் பற்றி கூறியதாக டிவிட்டரில் தர்மேந்திர பிரதான்  தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய  4 நகரங்களில் கூடுதலாக இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான மையங்கள்
அமைக்கப்படும் என்றும்  இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 18 நகரங்களாக இது உயர்த்தப்பட்டுள்ளதாகவும்  13 மொழிகளில்  தேர்வு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

;