india

img

இந்தியாவுக்கு 40 நாடுகள் உதவி....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் தீவிர கொரோனா பரவல் காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க 40-க்கும் மேற்பட்ட நாடுகள் முன் வந்துள்ளன. இதன்படி 550 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 4 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டர்கள் மற்றும் 10 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஏராளமான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 2 சிறப்பு விமானங்கள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன.மேலும் எகிப்தில்இருந்து 4 லட்சம் ரெம்டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதே மருந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

;