india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வென்றதாக எழுந்த புகார் குறித்து கோட்டாட்சியர் விசாரிக்க மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

                         ***************

இலங்கை கடற்படைத் தாக்குதலில் பலியான நான்கு மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

                         ***************

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.85ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.67ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

                         ***************

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

                         ***************

பதினைந்து நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

                         ***************

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர்முடிவெடுப்பார் என உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார். 

                         ***************

புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. 

                         ***************

காலியாக உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்ப கலந்தாய்வை மேலும் ஒருவாரம்நடத்த அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

;