india

img

போலி தடுப்பூசி மையம் நடத்திய 2 பேர் கைது....

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலி தடுப்பூசி மையம் நடத்தி வந்த2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

பாரபங்கி மாவட்டம் ஜாயித்பூர் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மருத்துவ மையம் நடத்தி வருவது கண்டறியப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக திறக்கப் பட்ட இந்த திடீர் மையம் குறித்து டாக்டர் சுனில்குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு கோவிஷீல்டு தடுப்பூசிகுப்பிகளும், போலி தடுப்பூசி அட்டைகளும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து அந்தமையத்தை நடத்தி வந்த பிரிஜேந் திர குமார், சந்தீப் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சந்தீப்குமார், அங்கிருந்து தடுப்பூசிகளை திருடி வந்து இந்த மையத்தில் வைத்து மக்களுக்கு போட்டு வந்ததுவிசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

;