india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

பாபா ராம்தேவிடம் யோகா கற்றுக் கொண்டீர்களே யானால் உங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 06 ரூபாயாக தெரியும் என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூனுடன் குறிப்பிட்டுள்ளார்.

                                                         *********************

கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

                                                         *********************

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் 103 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

                                                         *********************

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

                                                         *********************

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 12,194 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320-ஆக அதிகரித்துள்ளது.

                                                         *********************

“மைத்ரி தடுப்பூசி’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கரீபியன் தீவுகளான டொமினிகன் குடியரசு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

                                                         *********************

தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் கன்னய்ய குமார் உள்பட 9 பேர் மார்ச் 15 ஆம் தேதி ஆஜராகுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

                                                         *********************

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அளித்த பரிந்துரையை ஏற்று, மாநிலங்களவைத் தலைவா் வெங்கைய்யா நாயுடு இதனை அறிவித்துள்ளார்.

                                                         *********************

ஊடகவியலாளா் ராஜ்தீப் சா்தேசாய் நீதித்துறையை விமா்சித்து ட்விட்டரில் பதிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அவா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதையும் தாமாக முன்வந்து பதிவு செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

                                                         *********************

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது தொடா்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

                                                         *********************

தென் ஆப்பிரிக்கா வகை கொரோனா தீநுண்மியால் 4 பேரும் பிரேசில் வகை கொரோனா தீநுண்மியால் ஒருவரும் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

                                                         *********************

ஜார்கண்ட், பீகார் மாநில முன்னாள் ஆளுநா் ரமா ஜோய்ஸ் (89) பெங்களூருவில் காலமானார்.

                                                         *********************

தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்ற தாக எழுந்த புகார் தொடா்பான வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வா் பூபேந்தா் சிங் ஹூடா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நால்வா் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

                                                         *********************

பீகார் மாநிலத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணி ஆக்கிய தனியார் பள்ளி முதல்வருக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

                                                         *********************

இந்தூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் லேசான விரிசல் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

                                                         *********************

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்ணின் தோளில் இளைஞரை அமர வைத்து 3 கி.மீ. தொலைவுக்கு நடக்க வைத்து தாக்கிய உறவினா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

                                                         *********************

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,669 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

                                                         *********************

நாட்டில் இதுவரை 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

                                                         *********************

கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

                                                         *********************

மத்தியப் பிரதேச மாநிலம், ஸித்தி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

                                                         *********************

10 தினங்களுக்கு முன்பு உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உருண்டதால் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களை முழுமையாக மீட்கும் வரையிலும் மீட்புப்பணிகள் தொடரும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பி.கே.திவாரி தெரிவித்துள்ளார்.

                                                         *********************

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 30.96 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநாகராட்சி தெரிவித்துள்ளது.

                                                         *********************

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்கு பலியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

                                                         *********************

விருதுநகர் - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் அக்டோபர் 2021க்குள் முடிவடையும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

                                                         *********************

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழனன்று (பிப்.18) மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

                                                         *********************

திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்காக தானே தவிர, தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

                                                         *********************

தமிழகத்தில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

                                                         *********************

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 104.32 அடியாக சரிந்தது.

                                                         *********************

தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லை என்ற நிலை தொடா்வது வேதனையளிக்கிறது என்று பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவரும் தமிழ்ப்பணி இதழ் நிறுவனருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் கூறியுள்ளார்.

                                                         *********************

சென்னை காவல் ஆணையா் தொடக்கி வைத்த குழந்தைகள் பாதுகாப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 15 நாள்களில் 435 குழந்தைகள் மீட்கப்பட்டன.

;