இந்தியாவில் இன்று 52வது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
பல்வேறு தொழில்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நலன், பாதுகாப்பு, பணிபுரியும் சூழல் ஆகியவை பாதிக்காத வகையில் பணி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1966-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.
1971-ஆம் ஆண்டில் மார்ச் 4-ஆம் தேதி, முதன்முதலில் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இன்று 52வது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.