india

img

மேற்கு வங்காளத்தில் ஆண் , பெண் ஆயுள் கைதிகளை விடுவிக்க அரசு முடிவு

கொல்கத்தா : கொரோனா நோய்த்தொற்று அதிகம் பரவி வரும் மாநிலங்களில் மேற்கு வங்காளமும் முக்கிய இடத்தில் உள்ளது. இதனால் சிறைச்சாலைகளில் நெருக்கடி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் , மேலும் மனிதநேய அடிப்படையிலும் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே ஆயுள் கைதிகளை விடுவிக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருக்கிறார்.

இதன்படி 60 வயதுக்குக் கூடுதலான 61 ஆண் கைதிகளையும் , 55 வயதுக்கு மேற்பட்ட 2 பெண் கைதிகளையும் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. 

;