கொல்கத்தா : கொல்கத்தா விமான நிலையம் அருகே ரூ. 4250 கோடி ரூபாய் மதிப்புள்ள கதிரியக்க உலோகத்தைக் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர். மேலும் , இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா விமான நிலையத்தில் , குற்றப் புலனாய்வுத் துறையினர் , சந்தேகத்தின் பேரில் நான்கு சாம்பல் நிற கற்களை மீட்டனர்.அந்த கற்கள் , இருட்டில் பிரகாசமாக ஒளியைப் பிரதிபலிப்பதாகத் தகவல் தெரிவித்தனர். இதனால் கனிம பரிசோதனை செய்யப்பட்டு, இவை கதிரியக்க உலோகம் எனக் கண்டறிந்தனர். மேலும் , இந்த கற்களானது , "கலிஃபோர்னியம்" எனப்படும் கதிரியக்க உலோகம் என்றும் , இது அணுகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உலோகம் என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த சைலான் கர்மாகர் மற்றும் அசிட் கோஸ் ஆகியோரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கலிஃபோர்னியத்தின் விலை இந்திய நாணயத்தின்படி ஒரு கிராமிற்கு சுமார் 17 கோடியாகும்.