india

img

கேரளாவில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

திருவனந்தபுரம், ஜன.4-
கேரளாவில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன.

கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து, இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக இளங்கலையில் இறுதியாண்டு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.
பொறியியல் கல்லூரி மாணவர்களில் 3, மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் இன்று முதல் துவங்குகின்றன.

;