india

img

இந்த கட்டத்திலும் நாம் உயிர்வாழ முடியும் முகநூலில்....   வி.எஸ்.அச்சுதானந்தன்...

திருவனந்தபுரம்:
கோவிட் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் இந்த கட்டத்தில் நாம் உயிர்வாழ முடியும் என்று சிபிஎம் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

பொது மருத்துவமனையில் தனது மகன் அருண்குமாருடன் வந்து கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வி.எஸ். அச்சுதானந்தன் போட்டுக்கொண்டார். அதன் பிறகு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது: “தொற்றுநோயின் இரண்டாவது அலை வலிமை பெற்றுள்ளது. கவனிப்பும் ஒழுக்கமும் அவசியம். நாம் உயிர்வாழ முடியும்” என்ற நம்பிக்கையை விட்டு விடாமல் கவனத்துடன் முன்னேற முடியும் என்று அவர்தெரிவித்துள்ளார். மார்ச் 6 ஆம் தேதி வி.எஸ். கோவிட் தடுப்பூசியின் முதல் அளவைப் போட்டுக்கொண்டார்.

;