india

img

குஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

காந்திநகர், ஜன.27-

குஜராத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி  நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநிலக் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பூபேந்திர சிங் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி 11ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;