india

img

ஜர்கிஹோலி ஆபாச வீடியோ விவகாரம்.... அரண்டுபோய்க் கிடக்கும் மேலும் 6 பாஜக அமைச்சர்கள்....

பெங்களூரு:
கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜர்கிஹோலி, அரசு வேலைஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் கர்நாடகத்தில் வீடியோஆதாரமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜர்கிஹோலி அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.இந்நிலையில், ஜர்கிஹோலியைப் போல தாங்களும் சிக்கலாம் என்ற அச்சம் பாஜக அமைச்சர் களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலான எந்தவித விஷயத்தையும் வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென, அம்மாநிலத்தின்6 கேபினட் அமைச்சர்கள் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.அம்மாநிலத்தின் எஸ்.டி. சோம சேகர், ஷிவராம்ஹெப்பார், பி.சி. பட்டீல், டாக்டர் சுதாகர், நாராயணகவுடா மற்றும் பைரட்டி பசவராஜூ ஆகிய 6 பேர்தான்,நீதிமன்றத்தை நாடியுள்ள கேபினட் அமைச்சர்கள் ஆவார்கள். அவர்கள், “தங்கள் தொடர்பான எந்த அவதூறான வீடியோவோ அல்லது உள்ளடக்கமோ, அச்சுஊடகங்களிலோ அல்லது வேறெந்த வகையிலோ ஒலி-ஒளிபரப்பு செய்யப்படாமல் தடைவிதிக்க வேண்டும்” என்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவே, ஆபாசவீடியோ ஒன்றில் சிக்கியிருப்பதாகவும், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டித்தான் பலரும் அமைச்சர் பதவிகளைப் பெறுகிறார்கள் என்றும் பி.ஆர். பாட்டில் என்றபாஜக அமைச்சர், கடந்த ஜனவரி மாதமே பரபரப்பைக் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;