india

img

மாட்டுச்சாணம் - சிறுநீரில் தயாரித்த சோப்பு போட்டே குளிக்க வேண்டும்... பாஜக கால்நடைத்துறை அமைச்சர் சொல்கிறார்...

பெங்களூரு:
மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்புகளைமக்கள் பயன்படுத்த வேண்டும் எனபாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில கால்நடைத்துறை அமைச்சர் பிரபுசவுகான் பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் வரிசையில், கர்நாடக மாநில பாஜக அரசும் மிகத் தீவிரமான முறையில் பசுமாடுகள் மீதுஅக்கறை செலுத்தத் துவங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ள பாஜக அரசு, பசுவதையில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்று பயமுறுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், பசுக்களை பாதுகாக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள மாநிலகால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பிரபு சவுகான், மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பு, வாசனைபத்திகள் உள்ளிட்ட பொருட்களையே பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.பசுவிலிருந்து கிடைக்கும் பால்,தயிர், வெண்ணெய், நெய், உள் ளிட்ட பொருட்களை மட்டும் அதிகளவில் பயன்படுத்தும் மக்கள்,அதன் சிறுநீர், சாணம் உள்ளிட்டவற்றை மட்டும் பயன்படுத்த முன்வராதது தனக்கு கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பிரபு சவுகானின் இந்தப் பேச்சு,சமூகவலைதளங்களில் கடும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி வருகிறது.

;