india

img

கர்நாடகாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 24 முதல் தொடக்கம்

பெங்களூர், ஜன.29
கர்நாடகாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 24ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதனைதொடர்ந்து, கர்நாடகா மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 24ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்

;