india

img

ஒடிசா: ரூர்கேலா இரும்பு ஆலையில் நச்சு வாயு கசிந்து 4 பேர் பலி

புவனேஸ்வர், ஜன.06-

ஒடிசா ரூர்கேலா இரும்பு ஆலையில் நச்சு வாயு கசிந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ளா ரூர்கேலா இரும்பு ஆலையில் இன்று காலை நிலக்கரி இரசாயனத் துறையில் 10 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு நச்சு வாயு கசிந்துள்ளது. அதை சுவாசித்த தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளனர். அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தனர்.
இந்நிலையில், தொழிலாளர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 4 பேரும் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;